தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Monday, August 11, 2008

மடு மாதாவுக்கு தூய்மைச் சடங்கு !

ஸ்ரீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் அகோர சண்டை ஏற்பட்டு வரும் இவ்வேளையில் மன்னார் பிரதேசம் ஸ்ரீலங்கா படையினர் வசமானது, இதனைத் தொடர்ந்து மடு மாதாவுக்கு பாதுகாப்பில்லை எனும் காரணத்தினைக் காட்டி மடு மாதா திருச்சொரூபம் வன்னியிலுள்ள தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது.




பாதுகாப்புக் காரணத்தினைக் காட்டி மடுவுக்குச் சொந்தமான மாதாவை தேவன்பிட்டிக்குக் கொண்டு சென்றது ஏற்புடையதல்ல, திரும்பவும் மடு மாதா திருச்சொரூபத்தை மடுவுக்கு கொண்டு செல்லுங்களென கத்தோலிக்கர்கள் பலர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க திரும்பவும் மன்னார் ஆயர் இல்லத்தில் மடு மாதா திருச்சொரூபம் கொண்டு வைக்கப்பட்டது.

மடு மாதாவின் திருச் சொரூபம் அங்கிருந்து நேற்று முந்தினம் மடு தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது, இன்று காலை தூய்மைச் சடங்குடன் ஆசீர்வதிக்கப்பட்டு அன்னையின் திருச்சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

No comments: